Sunday, December 25, 2011

கவிதை எனும் கிறுக்கல்கள் சில

1)

தலைப்பு: காதல் கவிதை

அன்புள்ள காதலிக்கு

உனக்கு நான் எழுதும்
முப்பத்தி நான்காவது
காதல் கவிதை இது.

மொத்தத்தில்
நான் எழுதும்
எம்பத்தி ஒன்பதாவது
காதல் கவிதையும் இதுவே.

வழக்கம் போலவே இந்த கவிதையும்
என் வீட்டு குப்பை தொட்டியை மட்டுமே
அலங்கரிக்கப்போகிறது.

உன் காதலிக்கான ஒரு பூவை
வாங்குவதற்கு,
ஒருவனின் உதவி உனக்கு தேவையெற்றால்
அந்த காதலை தூக்கி எறி என்றான்
எனக்கு பிடித்த கவிஞன் ஒருவன்.

உன் காதலை சொல்வதற்கு
உனக்கு தைரியமில்லை என்றால்,
அந்த காதலை தூக்கி ஏறி என்கிறேன் நான்.

மன்னிக்கவும், இதன் தலைப்பு
இப்படிதான் இருந்திருக்கவேண்டும்.

காதல் தோல்வி.
$$$$

2)
என் ப்ரியத்திற்குரிய நண்பனுக்கு

நீயும் உன் காதலியும்
ரோஜா பூக்களை தூவுவதில்
எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால்,

அதற்கு என் கல்லறைதானா கிடைத்தது??

$$$

3)
நான் எழுதும் காதல் கவிதையில்
எழுத்துப்பிழையும் இலக்கணப்பிழையும்
இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.

பாவம்,
அவர்களுக்கு எப்படி தெரியும்
உன்னை காதலித்த பின்
என் வாழ்க்கையே பிழையான கதை.

$$$

4)
இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள்
என்னால் காதல் கவிதைகள்
எழுத முடியாது என்பதை

$$$

5)
காதல் கவிதை எழுதுவதற்காக
ஒரு பெண்னைக் காதலிக்க தொடங்கினேன்.

இதோ என் கவிதையின்
முதல் வரி கிடைத்துவிட்டது.
கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள்

அந்த பெண்னைக் காதலித்த பின்
என் கவிதையை தொடர்கிறேன்

$$$

6)
மீண்டும் என்னை
காதல் கவிதைகள் எழுத சொல்லாதீர்கள்.

அவை என் கைகளை நடுங்க செய்கின்றன,
கண்களில் கண்ணீர் உண்டாக்குகிறது,
நரம்புகளைக் கட்டி போடுகிறது.

எல்லாவற்றையும் விட
சில நேரங்களில்
சாம்பல் நிற பூணை ஒன்றை நினைவுப்படுத்துகிறது.
$$$

7)
இரண்டு முறை காதலித்து,
மூன்று முறை கைவிடப்பட்டு,
ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்த
எல்லோராலும்
இதைப்போன்ற பைத்தியக்கார கிறுக்கல்களை
எழுதிவிட முடியும்.

இப்பொழுது புரிந்திருக்கும்,
இவற்றை நான் யாரிடமிருந்து திருடினேன் என்று.

No comments: